Saturday, 29 September 2018


விளக்குதல் திறன்

                                                பெயர்: லாவண்யா கணிதம்/தமிழ்

பாடம்
:
சிலப்பதிகாரம்
வகுப்பு
:
பத்தாம் வகுப்பு



     ஆசிரியர் மாணவர்களே! இன்று நாம் சிலம்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில் வழக்குரை காதையை பற்றி காண்போம்.

     காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன் மேலும் இவன் கலையுணர்வும் வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன் மற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் மேலும் திருமகள் போன்ற அழகும் பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பும் கற்புத்திறமும் மிக்கவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு இன்புற்று வாழ்ந்தனர்.

     இதனைதொடர்ந்து, கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பினான் ஆதலால் கண்ணகியை விட்டுப்பிரிந்தான். மேலும் அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித்தன் செல்வத்தையெல்லாம் இழந்தான்.மாதவி இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடினாள். இதன் விளைவாக பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துக்கொண்ட கோவலன், இதனை தொடர்ந்து மாதவியை விட்டுப் பிரிந்தான். இவ்வாறாக பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். மேலும் அவன் தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். இதற்கு மேல் வாணிகம் செய்யற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறைவி சென்றார். பின்னர் அவர் மதுரை நகர்புறத்தில் மாதிரி என்னும் இடையர்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினர். இதற்கு மேலாக கோவலன் சிலம்பு விற்று வர மதுரைநகரக் கடைவீதிக்கு சென்றான். இதன் விளைவாக விலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனை கோவலன் விற்பதனைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்ல்ன் அறிந்தான்.

     பின்னர் பாண்டியாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன் என்று பொய்யான பழியை கோவலன் மேல் சுமத்தப்பட்டு மேலும் அவன் கொல்லப்பட்டான். பின்னர் இதனை அறிந்த கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்பதனை மன்னனுக்கும், உலகோர்க்கும் உணர்த்த எண்ணி பாண்டிய மன்னன் அவைக்குச் சென்று “வாயிற்கடைமணி நடுங்கா நடுங்க“ என்ற வாசகத்திற்கு இணங்க கண்ணகி மன்னனிடம் “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி” என்னும் மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயரை அறிந்து, மேலும் தன் ஒப்பற்ற மகனையே தேர் சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச்சோழனும் வாழ்ந்த, புகார் நகரமே யான் பிறந்த ஊர்  புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் என்பவரின் மகனை மணம்புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னா! ஊழ்வினை பயனால் நின் மதுரை நகரத்துக்கு வந்து, என்னுடைய காற்சிலம்பினை விற்க முயன்று உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி என்று தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்தினால் என்பதனை இன்று பார்த்தோம்.

நன்றி

வினாக்கள்:

1)  பெருவணிகன் மகன் யார்?

2)  ஆடலரசி என்று அழைக்கப்படுபவர் யார்?

3)  கண்ணகியின் கணவன் பெயர்?

4)  புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன் யார்?



பாடத் தலைப்பின் அறிமுகத்திறன்

விரும்பத்தகு உட்கூறுகள்:

மாணவர்களின் முன்அறிவினை பயன்படுத்துதல்

பொருத்தமான யுக்தியை தேர்ந்தெடுத்தல்


பெயர்             :    லாவண்யா  கணிதம் / தமிழ் 
பாடம்
:
நாட்டுப்புறப்பாடல்
வகுப்பு
:
ஒன்பதாம் வகுப்பு
ஆசிரியர்
:
வணக்கம் மாணவர்களே
மாணவர்
:
ஒரு அழகான கிராமம் ஒன்று உள்ளது. அதில் கலைவாணி என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளின் தாய் வயலில் வேலைப் பார்த்துக் கொண்டியிருக்கிறார். கலைவாணி தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும். தன் தாயுடன் வயல் பரப்பிற்கு சென்று சிறிது நேரம் வேலைகளையும் செய்வாள். பிறகு (பொ.தொ)  வீட்டிற்கு வந்து தனது பாடத்தினை படிப்பாள். இவ்வாறு அவள் தினமும் செய்வாள்.(பொ.தொ) (க.கூ)
ஆசிரியர்
:
இக்கதையில் உங்களுக்கு என்ன புரிகிறது? (பொ.தொ)
மாணவர்
:
கலைவாணி கிராமத்தில் வாழ்கிறாள்
ஆசிரியர்
:
மேலும் வேறென்ன புரிகிறது. (பொ.தொ)
மாணவர்
:
கலைவாணி தினமும் வயலில் வேலைப் பார்க்கிறாள்
ஆசிரியர்
:
நீங்கள் கிராமத்திற்கு சென்றது உண்டா?
மாணவர்
:
சென்றிருக்கிறோம்.
ஆசிரியர்
:
கிராமத்தில்என்னவெல்லாம் பார்த்திருக்கிறாய்?(மு.அ.ப)
மாணவர்
:
வயல்வெளிகள், கால்வாய்கள்
ஆசிரியர்
:
வயல்வெளியில் என்ன பார்த்தாய்?
மாணவர்
:
வயல்வெளியில் பெண்கள் பயிர் நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் வேலை செய்யும் போது வேறு எதாவது செய்வார்களா?(மு.அ.ப)
மாணவர்
:
அவர்கள் பாடல் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்
ஆசிரியர்
:
நீங்கள் மீன்பிடிப்பவரை பார்த்திருக்கீர்களா? (மு.அ.ப)
மாணவர்
:
பார்த்திருக்கிறோம். அவர் மீன்கள் பிடிப்பார்.
ஆசிரியர்
:
அவர் மீன்களை வலையைப் போட்டு பிடிப்பார். அல்லவா? மேலும் அவர் என்ன செய்வார். (பொ.தொ)
மாணவர்
:
அவரும் பாடல் ஒன்றை பாடிக் கொண்டே மீன்பிடிப்பார்.
ஆசிரியர்
:
மீனவருக்கும்,வயலில் வேலை செய்பவருக்கும் என்ன ஒற்றுமை உள்ளது? (பொ.தொ)
மாணவர்
:
இருவருமே பாடிக் கொண்டே தங்கள்         வேலையைச் செய்கிறார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் ஏன் பாடிக்கொண்டே வேலைச்               செய்கிறார்கள்? (மு.அ.ப)
மாணவர்
:
வேலைச் செய்யும் போது உற்சாகத்துடன் இருக்க அவ்வாறு செய்கிறார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் பாடும் பாட்டிற்கு ஏதாவது பெயர் உண்டா? (மு.அ.ப)
மாணவர்
:
அவர்கள் நாட்டுபுற பாடல் பாடுகிறார்கள்.
ஆசிரியர்
:
நாம் இன்றைய வகுப்பில் நாட்டுபுற பாடல்களில் அமைந்த மீனவர் பாடல் பற்றிய பாடத்தை பார்க்கப்போகிறோம்.(தொடங்குதல்)


Friday, 28 September 2018


ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 16
மாதிரி பாடத்திட்டம் – 1

பயிற்சி ஆசிரியர் பெயர் - மகாலட்சுமி   பாடம்தமிழ்                    நாள் – 24.08.2018
பள்ளி                                 அலகுஓ, என் சமகாலத் தோழர்களே!       நேரம் – 45 மணித்துளிகள்
வகுப்பு    ஒன்பதாம் வகுப்பு      துணை அலகு
மாணவர் எண்ணிக்கை
கற்பித்தல் பொது நோக்கங்கள்மாணவர்
v  கவிதைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
v  கவிதையான ஓ. என் சமகாலத் தோழர்களே! பற்றி புரிந்து கொள்ளுதல்
v  சிந்தனையாற்றலை பெருக்குதல்
v  பல்வகைத் திறன்களை வளர்த்தல்
கற்பித்தல் சிறப்பு நோக்கங்கள்மாணவர்
v  திராவிட மொழிகளை நினைவு கூர்தல்
v  கவிஞர் எனக் கூறக் காரணம் அறிதல்
v  கவிஞர்களின் பெயரை பட்டியலிடுதல்
v  கவிஞர் வைரமுத்துவை அடையாளம் காணல்
v  நூல்வெளி மற்றும் ஆசிரியர் பற்றிய வரலாற்றினை அறிதல்
v  கவிதையை குரல் ஏற்றத்தாழ்வுடன் படித்தல்
v  கவிதையின் பொருளை விளக்குதல்
v  கவிஞர், நதியிடம் வேண்டுகோள் விடுத்தலைக் கூறுதல்
v  பொறுமைக்கு உதாரணம் தருதல்
v  அறிவை – திரியுடன் ஒப்பிட்டுக் காட்டுதல்
v  கவிதையின் மையக்கருத்தை உணர்தல்
v  தொடை நயம் உணர்தல்
v  இலக்கணப் குறிப்பை உற்றுநோக்கல்
v  இலக்கணப் குறிப்பிற்க்கு காரணம் காணல்
v  கவிதையின் பொருளையும், வரலாற்றையும் தொகுத்துக் கூறுதல்
கற்பித்தல் உபகரணங்கள்:
v  வரைபடத்தாளில் ஏவுகணை
v  கவிஞர்களின் படம்
v  பொருத்து அட்டையின் மூலம் இலக்கண குறிப்பு

நோக்கக் கூறுகள்
பாடப்பொருள்
கற்றல் அனுபவம்
மதிப்பீடு
மாணவர்
நினைவு கூர்தல்
திராவிட மொழிக் குடும்பத்தில், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பிராகுயி முதலான மொழிகள் உள்ளன.

திராவிட மொழிக் குடும்பத்தில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி

கவிதை, அதற்கொரு கருவி, பாடல்கள், நாவல், போன்றவற்றை கையாள்கின்றனர்
திராவிட மொழிக் குடும்பத்தை பற்றிய முன்னறிவை ஆசிரியர் சோதித்தல்

பழமையான மொழியை மாணவரிடம், ஆசிரியர் கேட்டறிதல்.

தமிழின் பெருமையை பாட கையாளும் உத்தியை ஆசிரியர் மாணவரிடம் வினவுதல்

காரணம் அறிதல்
கவிதை எழுதுபவர்களை கலைஞர் என்றும் அழைக்கலாம்.
கவிதை எழுதுபவர்களை எவ்வாறு அழைக்கலாம் என்று மாணவர்கள் ஆசிரியரிடம் கூறுதல்

பட்டியிலிடுதல்
வைரமுத்து, மதன் கார்க்கி, தாமரை, நாஞ்சில் நாடன், ஞான கூத்தன், கவிக்கோ அப்துல் ரகுமான்-------------
மாணவர்களுக்கு தெரிந்த கவிஞர்களின் பெயரை  ஆசிரியரிடம் பட்டியலிட்டுக் கூறுதல்
கவிஞர்களின் சிறப்பு யாது
அடையாளம் காணல்
கவிக்கோ அப்துல் ரகுமான், பாரதியார், வாலி, குட்டி ரேவதி, வைரமுத்து
கவிஞர்களின் படங்களை காட்டி, மாணவர்களை வைரமுத்துவை அடையாளம் காட்டச் செய்தல்
வைரமுத்துவைப்பற்றிய சில விவரங்களை கூறுக.
வரலாறு அறிதல்
கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்ணும் ஊரில் பிறந்தவர். இவர் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர். தேசிய விருது 7, மாநில அரசின் விருது 4-ம் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் மாணவர்களிடம் வைரமுத்துவைப்பற்றிய குறிப்பை எடுத்துக்கூறல்
வைரமுத்து 2003-ல் என்ன விருது பெற்றார்.
அ) பத்மபூஷன்
ஆ) சாகித்திய அகாடமி
இ) மாநில விருது
ஈ) தேசிய விருது
ஏற்றத் தாழ்வுடன் படித்தல்
கிளிக்கு றெக்கை இருக்கு வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை முளைக்கும் விடைகள் முளைக்கத்
----------------------------------------------------------------
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஆசிரியர், குரல் ஏற்றத்தாழ்வுடன் பாடலை படித்தல்

விளக்குதல்
நம்பிக்கை என்ற ஒன்று, இருக்கும் வரை முயன்றுக் கொண்டே இரு இயற்கைக்கு வேண்டுகோள் விடுகின்றனர். முதுமொழியை வாழ்க்கைப்படுத்த வேண்டும். பொறுமையை இழக்க வேண்டாம், ஒப்பிட்டுக் கூறல், ஏவுகணையிலும் தமிழை எழுதுங்கள்
பாடலின் பொருளை ஆசிரியர் விரிவாக மாணவர்க்கு விளக்குதல்
ஏவுகணையில் என்ன செய்யர் சொல்கிறார் கவிஞர்.
வேண்டுகோள்
பாய்ந்து வரும் நதிகளே, பள்ளம் எங்குள்ளதோ அதனை நிரப்ப வாருங்கள், காய்ந்து கிடக்கின்ற வயல்களை எங்கும் கதிர்கள் சுமக்க வையுங்கள்.
ஆசிரியர், கவிஞர் நதியிடம் வேண்டிய வேண்டுகோளை எடுத்துக் கூறல்
எதற்காக நதியை அழைக்கிறார் கவிஞர்
எடுத்துக்காட்டு கூறல்
கூட்டுப்புழுதான் பட்டுப்பூச்சியாய் கோலம் கொள்கிறது. அது போல் பொறுமையுடன் இருந்தால் உன் வாழ்க்கை பூகோலம் கொள்ளும்.
பொறுமைக்கு, உதாரணத்தை, ஆசிரியர் மாணவர்க்கு கூறுதல்
கூட்டுப்புழு எவ்வாறு உருவெடுக்கிறது?
ஒப்பிடுதல்
அறிவை மறந்த உணர்ச்சி
திரியை மறந்த தீயாகும்
அறிவை – திரிக்கும்
உணர்ச்சியை – தீக்கும் ஒப்பிடுகின்றனர்
ஆசிரியர், அறிவை, திரியுடன் ஒப்பிடுதலை மாணவர்க்கு, தெளிவுபடுத்துதல்
உணர்ச்சியை எதனுடன் ஒப்பிடுகிறார் கவிஞர்.
அ) தீ
ஆ) திரி
இ) இரண்டும்
மையக்கருத்தை உணர்தல்
அறிவியலோடு, அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும். அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும். நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதனையும் உணர்த்துகின்றது.
ஆசிரியர், இந்த பாடலின் மையக்கருத்தை தன்னுடைய பார்வையில் கூறுதல்
தமிழர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்.
தொடை நயம் உணர்தல்
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை.
முளைக்கும் விதைகள் முளைக்கத்துடித்தால்
பூமிக்கு ஒன்றும் பாரமில்லை
è  ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறிதி சொல் ஒத்து வரும் போது அதுப் இயைபுத் தொடை எனலாம்
பாடல் வரிகளில் உள்ள தொடை நயத்தை ஆசிரியர் மாணவர்க்கு விளக்குதல்
இயைபுத் தொடையை வரையறு
உற்றுநோக்கல்
பண்பும் அன்பும் – என்ணும்மைகள்
சொன்னோர் – விணையாலணையும் பெயர்
அம்பைப்போல் – உவம உருபு
ஆளும் தமிழ் – தொழிற்பெயர்
மாணவரை பொருத்து அட்டையின் மூலம் இலக்கண குறிப்பை பொருத்தச் செய்தல்
இனமும் மொழியும் இலக்கண குறிப்பு கூறுக
காரணங்காணல்
சொல்லுதல் என்பது வினை பெயர் ஆனால் சொல்லுபவரை (ஆளைக்) குறிப்பதால் விணையாலணையும் பெயர் என்றானது.
விணையாலணையும் பெயர்
என்று எவ்வாறு கூறுவீர் என்று ஆசிரியர் மாணவரிடம் வினவுதல்

கலந்துரையாடல்
விமானமும், ஏவுகணையும், பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல்
மாணவர், குழுவாக இணைந்து ஆசிரியர் முன் உரையாடல் நிகழ்ச்சியை நடத்துதல்
ஏவுகணையின் பயன்களை பட்டியலிடுக
தொகுத்துரைத்தல்
வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர்-ல் பிறந்தார். இவர் பத்மபூஷன் விருதினைப் பெற்றவர். 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். நம்மிடம் முயற்சி என்ற தன்னம்பிக்கை இருக்கும் வரை தோழ்விக்கு இடமில்லை. மூத்தோர் சொல்லை மதிக்க வேண்டும், பொறுமையுடன் இருக்க வேண்டும். அறிவை திரியாகவும் உணர்ச்சியை தீயாகவும் பயன்படுத்த வேண்டும். ஏவும் திசையில், அம்மைப் போல் இருந்த இனத்தை மாற்றி ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக்கோளிலும் ஏற்றுங்கள்.
ஆசிரியர், மாணவர்க்கு நூல்வெளியையும், பாடலின் விளக்கத்தையும் தொகுத்துக் கூறுதல்
தமிழர்கள் எவற்றில் சிறந்து விளங்க வேண்டும்.
அ) அறிவியலில்
ஆ) அறிவியலில்
இ) கணிதத்தில்
ஈ) அ) மற்றும் ஆ)





                     
மீள்பார்வை
       1. கவிஞர் வைரமுத்து எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
             அ) 2001      ஆ) 2003      இ) 2009      ஈ) 2000
       2. ஆசிரியர் நதியை எதற்காக அழைக்கிறார்?
       3. வைரமுத்துவின் கவிதைகள் எம்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.
             அ) வங்காளம்      ஆ) ஆங்கிலம்      இ) கன்னடம்    ஈ) மலையாளம்,
       4. வைரமுத்து ஏவுகணையில் என்ன செய்யச் சொல்கிறார்?
       5. பண்பும், அன்பும் இலக்கண குறிப்பு யாது?
வீட்டுப்பாடம் :
        1. அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதுக?
        2. ஏவுகணையினை வரை?
       3. முதியோர்கள் கூறிய முதுமொழிகளை பட்டியலிடு?
       4. தமிழர்கள் எவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என ஆசிரியர் கூறுகிறார்.
         அதனை உன்னுடைய கண்ணோட்டத்தில்
எழுதுக.




வழிகாட்டி ஆசிரியர் கையொப்பம்                                         பயிற்சி ஆசிரியர் கையொப்பம்



மாதிரி பாடத்திட்டம் – 2

பயிற்சி ஆசிரியர் பெயர் : மகாலட்சுமி     பாடம்தமிழ் உரைநடை                நாள் – 14.09.2017
பள்ளி -                                     அலகுஇயந்திரங்களும்
                                                        இணையவழிப் பயன்பாடும்
   நேரம் – 45 மணித்துளிகள்
வகுப்புஒன்பதாம் வகுப்பு              துணை அலகு
மாணவர் எண்ணிக்கை
கற்பித்தல் பொது நோக்கங்கள்மாணவர்
v  இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் பற்றி அறிந்து கொள்ளுதல்
v  ஒளிப்படி இயந்திரம் பற்றி புரிந்து
கொள்ளுதல்
v  சொற்களஞ்சியம் பெருக்குதல்
v  அடிப்படைத் திறன்களை வளர்த்தல்

கற்பித்தல் சிறப்பு நோக்கங்கள் மாணவர்
v  அடிப்படைத் தேவைகளை நினைவு கூர்தல்
v  இயந்திரங்களைப் பற்றி மீட்டறிதல்
v  வாழ்வில் பயன்படும் இயந்திரங்களை பட்டியலிட்டு கலந்துரையாடல்
v  இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் காரணம் அறிதல்
v  மேலும் சில உதாரணங்களைக் கொடுத்தல்
v  பாடப் பகுதியை உற்றுக் கேட்டல்
v  ஒளிப்படி இயந்திரத்தின் அடையாளம் காணல்
v  ஒளிப்படி இயந்திரத்தின் வரலாற்றினை கூறல்
v  ஒளிப்படியை கண்டறிந்ததன் காரணம் அறிதல்
v  கலைச்சொற்கள் அறிதல் (சீரோகிராஃபி, ஜெராக்ஸ்)
v  ஏற்ற சொற்களையும், சொற்றொடரையும் பயன்படுத்துதல்
v  ஒளிப்படி இயந்திரத்தைப்பற்றி தொகுத்துரைத்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்       
v  ஒளிப்படிபடம் கொண்ட வரைபடத்தாள்
v  கலைச் சொற்கள் எழுதிய மின்அட்டை
v  பலவகையான ஒளிப்படியைக் கொண்ட படங்கள்

நோக்கக் கூறுகள்
பாடப்பொருள்
கற்றல் அனுபவம்
மதிப்பீடு
மாணவர்
நினைவு கூர்தல்
உணவு, உடை, இருப்பிடம்



சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, காய்கறிகள், பழங்கள் ------------


அரிசிமாவினைக் கொண்டு தயாரிப்போம்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளை ஆசிரியர் மாணவரிடம் கேட்டறிதல்

மாணவர்களுக்குத் தெரிந்த உணவின் பெயர்களை ஆசிரியர் கூறச் செய்தல்

இட்லி, தோசை, எதனைக் கொண்டு தயாரிக்கிறோம், என ஆசிரியர் மாணவரிடம் வினவுதல்

மீட்டறிதல்  
அரிசியை அரைப்பதன் மூலம் அரிசிமாவு கிடைக்கின்றது.
அரிசிமாவு உருவாக்கப்படுவதை மாணவர்கள் ஆசிரியரிடம் கூறுதல்

வேறுபாடு அறிதல்
அரிசி மாவினை அக்காலத்தில் உரலிலும், இக்காலத்தில் இயந்திரத்தின் உதவிகளைக் கொண்டு தயாரிக்கின்றனர்
அரிசி மாவினை அக்காலத்தில் எவ்வாறு தயாரித்தனர். இக்காலத்தில் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்று ஆசிரியர் மாணவரிடம் வினவுதல்

கலந்துரையாடல்
பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்க உணவு கட்டணச் சீட்டு வழங்க, பணம் எடுக்க, ----------------------------------------------
நாம் எங்கு, எங்கு இயந்திரத்தை பயன்படுத்துகிறோம் என்பதனைப் ப்ற்றி ஆசிரியருடன், மாணவரும் விவரங்களை பகிருதல்
இயந்திரங்களை பட்டியலிடுக
காரணம் காணல்
நேரச் செலவைக் குறைக்கவும், வேலை பளுவைக் குறைக்கவும், இயந்திரங்களை நாம் தற்போது பயன்படுத்துகின்றோம்
இயந்திரங்களை பயன்படுத்துவதன் காரணத்தை ஆசிரியர் மாணவர்க்கு கூறுதல்
இயந்திரத்தின் பயன்யாது.
எடுத்துக்காட்டுகள் தருதல்
ஒளிப்படி, தொலைநகல், தானியக்கப் பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் -----------------------
ஆசிரியர் மாணவர்க்கு இயந்திரத்திற்கான உதாரணங்களை கூறல்
இயந்திரத்தை அடையாளம் காட்டுக?
அ) மின் அஞ்சல்
ஆ) விசிறி
இ) முகநூல்
உற்றுகேட்டல்
ஒளிப்படி இயந்திரம் என்னும் தலைப்பில் உள்ள பத்திகள்
ஆசிரியர் பாடப்பகுதியை நிறுத்தல் குறிகளுடன் படித்தல்

அடையாளம் காணல்
தொலைநகல் இயந்திரம், ஒளிப்படி இயந்திரம், தானியக்கப்பண இயந்திரம்
வரைபடத்தாளில் படங்களை காட்டி ஒளிப்படி இயந்திரத்தை அடையாளம் காட்டச் செய்தல்
ஒளிப்படி இயந்திரத்தின் பயன் யாது?
அ) ஒளி அளக்க
ஆ) நகல் எடுக்க
இ) ஒளி பதிவு செய்ய
வரலாறு கூறுதல்
1959-ல் ஒளிப்படி இயந்திரம் கண்டறியப்பட்டது. இதனை செஸ்டர் கார்ல்சன் என்பவர்தான் அறிமுகம் செய்தார். இவர் நியுயார்க்கைச் சேர்ந்தவர். காப்புரிமைச் சட்ட வல்லுநராகவும் இருந்தார்.
ஆசிரியர் மாணவர்க்கு இயந்திரத்தை கண்டறிந்தவரையும், ஆண்டையும் எடுத்துக்கூறல்
ஒளிப்படி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு கூறுக?
அ) 1956
ஆ) 1969
இ) 1959
ஈ) 1952
காரணமறிதல்
செஸ்டர் கார்ல்சன், தன் தொழிலுக்காக நிறைய காகிதங்களைப் படி எடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணிச் சுமையே அவரை இப்புதிய கண்டுபிடிப்பை நோக்கி தள்ளியது
ஒளிப்படியை கண்டறிந்ததன்  காரணத்தை ஆசிரியர் மாணவர்க்கு விளக்குதல்
கார்ல்சன் எக்காரணத்திற்காக ஒளிப்படியை அறிமுகப்படுத்தினார்
கலைச் சொற்கள் அறிதல்
சீரோகிராபி – உலர் எழுத்து முறை
ஜெராக்ஸ்  - நகல்
ஆசிரியர் சொற்களுக்கான பொருளை மாணவர்க்கு தெளிவுபடுத்துதல்
புலக்கத்தில் உள்ள ஜெராக்ஸ் என்பதன் பொருள் யாது?
வாக்கியம் அமைத்தல்
சீரோகிராபி – உலர் எழுத்து – பொருள்
சீரோகிராபி என்றால் உலர் எழுத்து முறை என்ற பொருள் தரும்.
ஏற்ற சொற்களையும், சொற்றொடரையும் பயன்படுத்தி மாணவர் வாக்கியம் அமைத்தல்
ஜெராக்ஸ் புலக்கத்தில் நகல், இவற்றை பயன்படுத்தி வாக்கியம் அமைக்க
தொகுத்துக் கூறல்
பயணச்சீட்டு, உணவு கட்டணச் சீட்டு, எரிவாயு பதிவு, பொருள்களை வாங்கும் போதும் இயந்திரங்கள் பயன்படுகிறது. ஒளிப்படி இயந்திரம் செஸ்டர் கார்ல்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீரோகிராபி என்றால் உலர் எழுத்து முறை என்று பொருள். 1959 – ஆம் ஆண்டு ஒளிப்படி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசிரியர் மாணவர்க்கு இயந்திரமான ஒளிப்படத்தினைப் பற்றி தொகுத்துக் கூறுதல்
ஒளிப்பட இயந்திரம் அறிமுகம் செய்தவர் யார்?


மீள்பார்வை
      1. ஒளிப்படி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
             அ) 1956      ஆ) 1952      இ) 1959      ஈ) 1969
      2. கார்ல்சன் எக்காரணத்திற்காக ஒளிப்படியை அறிமுகப்படுத்தினார்?
      3. மின் அட்டையின் மூலம் சீரோகிராபி, ஜெராக்ஸ் – பொருள் அறிக.
      4. செஸ்டர் கார்ல்சன் எந்நாட்டைச் சார்ந்தவர்?
             அ) நியுயார்க் ஆ) இங்கிலாந்து இ) ஆஸ்திரேலியா
      5. ஜெராக்ஸ் என்பதன் பொருள் யாது?

வீட்டுப்பாடம் :
       1. உங்கள் வீட்டில் பயன்படுத்திவரும் இயந்திரங்களை பட்டியலிடு.
       2. இயந்திரங்களின் நன்மை, தீமைகளை எழுதுக.
      3. இயந்திரமும், மனிதனும் என்ற தலைப்பில் கட்டுரை கொடு


வழிகாட்டி ஆசிரியர் கையொப்பம்                                         பயிற்சி ஆசிரியர் கையொப்பம்