Saturday, 29 September 2018


பாடத் தலைப்பின் அறிமுகத்திறன்

விரும்பத்தகு உட்கூறுகள்:

மாணவர்களின் முன்அறிவினை பயன்படுத்துதல்

பொருத்தமான யுக்தியை தேர்ந்தெடுத்தல்


பெயர்             :    லாவண்யா  கணிதம் / தமிழ் 
பாடம்
:
நாட்டுப்புறப்பாடல்
வகுப்பு
:
ஒன்பதாம் வகுப்பு
ஆசிரியர்
:
வணக்கம் மாணவர்களே
மாணவர்
:
ஒரு அழகான கிராமம் ஒன்று உள்ளது. அதில் கலைவாணி என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளின் தாய் வயலில் வேலைப் பார்த்துக் கொண்டியிருக்கிறார். கலைவாணி தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும். தன் தாயுடன் வயல் பரப்பிற்கு சென்று சிறிது நேரம் வேலைகளையும் செய்வாள். பிறகு (பொ.தொ)  வீட்டிற்கு வந்து தனது பாடத்தினை படிப்பாள். இவ்வாறு அவள் தினமும் செய்வாள்.(பொ.தொ) (க.கூ)
ஆசிரியர்
:
இக்கதையில் உங்களுக்கு என்ன புரிகிறது? (பொ.தொ)
மாணவர்
:
கலைவாணி கிராமத்தில் வாழ்கிறாள்
ஆசிரியர்
:
மேலும் வேறென்ன புரிகிறது. (பொ.தொ)
மாணவர்
:
கலைவாணி தினமும் வயலில் வேலைப் பார்க்கிறாள்
ஆசிரியர்
:
நீங்கள் கிராமத்திற்கு சென்றது உண்டா?
மாணவர்
:
சென்றிருக்கிறோம்.
ஆசிரியர்
:
கிராமத்தில்என்னவெல்லாம் பார்த்திருக்கிறாய்?(மு.அ.ப)
மாணவர்
:
வயல்வெளிகள், கால்வாய்கள்
ஆசிரியர்
:
வயல்வெளியில் என்ன பார்த்தாய்?
மாணவர்
:
வயல்வெளியில் பெண்கள் பயிர் நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் வேலை செய்யும் போது வேறு எதாவது செய்வார்களா?(மு.அ.ப)
மாணவர்
:
அவர்கள் பாடல் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்
ஆசிரியர்
:
நீங்கள் மீன்பிடிப்பவரை பார்த்திருக்கீர்களா? (மு.அ.ப)
மாணவர்
:
பார்த்திருக்கிறோம். அவர் மீன்கள் பிடிப்பார்.
ஆசிரியர்
:
அவர் மீன்களை வலையைப் போட்டு பிடிப்பார். அல்லவா? மேலும் அவர் என்ன செய்வார். (பொ.தொ)
மாணவர்
:
அவரும் பாடல் ஒன்றை பாடிக் கொண்டே மீன்பிடிப்பார்.
ஆசிரியர்
:
மீனவருக்கும்,வயலில் வேலை செய்பவருக்கும் என்ன ஒற்றுமை உள்ளது? (பொ.தொ)
மாணவர்
:
இருவருமே பாடிக் கொண்டே தங்கள்         வேலையைச் செய்கிறார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் ஏன் பாடிக்கொண்டே வேலைச்               செய்கிறார்கள்? (மு.அ.ப)
மாணவர்
:
வேலைச் செய்யும் போது உற்சாகத்துடன் இருக்க அவ்வாறு செய்கிறார்கள்.
ஆசிரியர்
:
அவர்கள் பாடும் பாட்டிற்கு ஏதாவது பெயர் உண்டா? (மு.அ.ப)
மாணவர்
:
அவர்கள் நாட்டுபுற பாடல் பாடுகிறார்கள்.
ஆசிரியர்
:
நாம் இன்றைய வகுப்பில் நாட்டுபுற பாடல்களில் அமைந்த மீனவர் பாடல் பற்றிய பாடத்தை பார்க்கப்போகிறோம்.(தொடங்குதல்)


No comments:

Post a Comment