Thursday, 27 September 2018


ஸ்ரீசாரதாகல்வியியல்கல்லூரி(தன்னாட்சி), சேலம் – 16

மாதிரிபாடத்திட்டம்– 2


ஆசிரியர்பெயர் - டி.கவிதா    பாடம்தமிழ்உரைநடை            நாள்– 14.09.2017

பள்ளி -                                      அலகுநாடகக்கலை                நேரம் – 45 மணித்துளிகள்

வகுப்புஎட்டாம்வகுப்பு                    துணைஅலகுமுதல்மூன்றுபத்திகள்

மாணவர்எண்ணிக்கை

பொதுநோக்கங்கள்மாணவர்

அறிவுபெறுதல்– ‘நாடகம்என்றகருத்து

புரிந்துக்கொள்ளுதல் நாடகக்கலை என்ற கருத்துக் குறித்து

பாராட்டுணர்வைவளர்த்தல்நாடகத்தின்சிறப்புகளைப்பற்றி

அடிப்படைத்திறன்வளர்த்தல் படித்தல், கேட்டல், எழுதுதல், உற்றுநோக்கல்.


நோக்கக்கூறுகள்மாணவர்

நினைவுகூர்தல்                         முத்தமிழ் குறித்து

மீட்டறிதல்                             நாடகம் பற்றி

பிரித்துணர்தல்                    -      நாடகம் என்ற சொல்லை

கவனமுடன் கேட்டல்            -      நாடகத்தின் பொருள் விளக்கம்

விளக்குதல்                      -      நாடகத்தின் சிறப்புகள்

உற்றுநோக்கல்                   -      கூத்து,நாடக வகைகளைச் செய்துகாட்டல்

மீட்டறிதல்                             நாடகத்தின் தோற்றம் பற்றி

உற்றுநோக்கல்                   -      கூத்துக்கலை வரைப்படம்

வகைப்படுத்துதல்                -      கூத்துக்கலையின் வகைகள்

மேற்கோள்அறிதல்                -      இலக்கியங்கள்கூறும் தொடர்கள்

தொடர்புப்படுத்துதல்       -      கண்ணகி பாத்திரக் கூற்றினை நடித்தல்

சுட்டிக்காட்டுதல்                  -      மெய்பாடுகளை கலந்துரையாடல் செய்தல்

வேறுபாடு அறிதல்                -      நாடகம், நாட்டியம் வேறுபாடு காணுதல்

தொகுத்துரைத்தல்                 -      நாடகக்கலை என்னும் கருத்துக்களைப் பற்றி

துணைக்கருவிகள்             

1) பல்வேறு கூத்துக் கலை வடிவங்கள் அடங்கிய ஓவிய வரைபடம்


நோக்கக்கூறுகள்
பாடப்பொருள்
கற்றல்அனுபவம்
மதிப்பீடு
மாணவர்
நினைவுகூர்தல்
இயல், இசை, நாடகம்
முத்தமிழ் என்று எதை குறிப்பிடுகிறோம்?

மீட்டறிதல்  
படித்தவருக்கும், படிக்காதவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது நாடகமாகும். மக்கள் பார்த்ததும் கேட்டும் மகிழ்வது நாடகமாகும்.
நாடகம் என்றால் என்ன?

பிரித்துணர்தல்
நாடகம்நாடு+அகம் அகம்நாடு, உன்னை நோக்கு, உன்னை உணர், அகத்தை நாடு எனப்பொருள்படும்
நாடகம்என்ற சொல்லைப் பிரித்துப் பொருள் அறிக.
நாடகம் என்பதன் வேறுபெயர் யாது?
கவனமுடன் கேட்டல்      
நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வரும் காலத்தையும்தன்னகத்தே காட்டுவதால் நாடகம் எனப் பெயர் பெற்றது என்று வரும் பத்தி
நாடகத்தின் பொருள் விளக்கம்படி.

விளக்குதல்
நாடகம் என்பது தொல்காப்பியம் காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளது, ஒரு கதையை நிகழ்ச்சியை, உணர்வை நடித்தும் கூத்தாடியும் காட்டுவது நாடகம் ஆகும். நாடகத்திற்கு கூத்துக்கலை என்னும் பெயரும் உண்டு.
நாடகத்தின் சிறப்பை விளக்குக
தொல்காப்பியம் எவ்வகை நூல்?
உற்றுநோக்கல்     
அரிச்சந்திர நாடகம், நல்லத்தங்காள் கதை, இராம நாடகம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் செய்துகாட்டல்
உங்கள் ஊரில் திருவிழாவின் போது நடைப்பெற்ற கூத்து அல்லது நாடகங்களை நடித்துக்காட்டுக

மீட்டறிதல்
தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் ஆகும். நாடகத்தின் வரலாற்றைப் பார்க்கும் போதுபோலச்செய்தல்என்னும் பண்பை அடிப்படையாக்க் கொண்டே நாடகம் தோன்றி உள்ளது.
நாடக தோற்றம் குறித்துக் கூறுக

உற்றுநோக்கல்
கூத்துக்கலை வரைந்த வரைபடம்
வரைப்படத்தை நோக்குக

வகைப்படுத்துதல்
மரப்பாவைக் கூத்து பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்து தோல்பாவைக்கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியவை பாவைக் கூத்தாக மக்களிடையே வழக்கில் இருந்தன.
கூத்துக் கலையின் வளர்ச்சி நிலைகளை வகைப்படுத்துக.
பொம்மலாட்டம் என்றால்என்ன?
மேற்கோள் அறிதல்
கூத்தாட்டவைக் குழாத்தற்றே என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ‘நாடகமேத்தும் நாடகக் கணிகைஎன்று நாட்டியமாடும் மாதவியைக் குறிப்பிடுகிறார்.
இலக்கியங்கள் கூறும் நாடகக் கருத்தினை அறிக
முத்தமிழ் காப்பியம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்
தொடர்புப் படுத்தல்
கண்ணகி பாண்டிய நெடுஞ்செழியனிடம் முறையிட்ட பாத்திர கூற்றினை நடித்தல்
கண்ணகிபாத்திரப்படைப்புதனி நடிப்பினை நிகழ்த்துக

சுட்டிக்காட்டுதல்
அழுகை, இளிவரல், அச்சம், வெகுளி போன்ற மெய்பாடுகளின் ஏற்ற இறக்கங்களை மாணவர்கள் உணர்ந்தனர்
குழுக்களாகப் பிரிந்து ஆராய்ந்து மேற்கண்ட நடிப்பிலுள்ள மெய்பாடுகளைச் சுட்டுக.

வேறுபாடு அறிதல்
தனிப்பாடல்களுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதனை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடகம்நாட்டியம் வேறுபாடு காண்க
மெய்பாடுகளின் வகைகளைக் குறிப்பிடு
தொகுத்துரைத்தல்
போலச்செய்தல் என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டு உருவான கலை வடிவம் நாடகம் ஆகும். பழங்காலம் தொட்டு தமிழரின் வாழ்வோடு இணைந்து நாடகம் வளர்ந்துள்ளது. நாடகம் என்பது உலகம் நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி ஆகும்.
நாடகக் கலைக் குறித்து குத்துரைக்க.














மீள்பார்வை

      1. நாடகம் - பொருள் விளக்கம் தருக.

      2. நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து குறிப்பிடுக.

      3. இலக்கியங்கள்குறிப்பிடும் நாடக மேற்கோளினைச் சுட்டுக.

      4. கூத்துக்கலையின் வளர்ச்சி நிலைகளை எழுதுக.

      5. மெய்பாடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.

தொடர்பணி

       1. சிலப்பதிகாரம் கூறும் நாடகச் செய்திகளைச் தொகுத்து எழுதுக.

       2. நாடகக் கலையின் சிறப்புகளை விளக்குக.

      3. நாடகக்கலை குறித்துத் தொகுத்துஎழுதுக?

      4.உங்கள் ஊரில் நடைப்பெற்ற நாடகம் குறித்து எழுதுக.






வழிகாட்டிஆசிரியர்கையொப்பம்                                            பயிற்சிஆசிரியர்கையொப்பம்

No comments:

Post a Comment