Saturday, 29 September 2018


விளக்குதல் திறன்

                                                பெயர்: லாவண்யா கணிதம்/தமிழ்

பாடம்
:
சிலப்பதிகாரம்
வகுப்பு
:
பத்தாம் வகுப்பு



     ஆசிரியர் மாணவர்களே! இன்று நாம் சிலம்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில் வழக்குரை காதையை பற்றி காண்போம்.

     காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன் மேலும் இவன் கலையுணர்வும் வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன் மற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் மேலும் திருமகள் போன்ற அழகும் பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பும் கற்புத்திறமும் மிக்கவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு இன்புற்று வாழ்ந்தனர்.

     இதனைதொடர்ந்து, கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பினான் ஆதலால் கண்ணகியை விட்டுப்பிரிந்தான். மேலும் அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித்தன் செல்வத்தையெல்லாம் இழந்தான்.மாதவி இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடினாள். இதன் விளைவாக பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துக்கொண்ட கோவலன், இதனை தொடர்ந்து மாதவியை விட்டுப் பிரிந்தான். இவ்வாறாக பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். மேலும் அவன் தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். இதற்கு மேல் வாணிகம் செய்யற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறைவி சென்றார். பின்னர் அவர் மதுரை நகர்புறத்தில் மாதிரி என்னும் இடையர்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினர். இதற்கு மேலாக கோவலன் சிலம்பு விற்று வர மதுரைநகரக் கடைவீதிக்கு சென்றான். இதன் விளைவாக விலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனை கோவலன் விற்பதனைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்ல்ன் அறிந்தான்.

     பின்னர் பாண்டியாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன் என்று பொய்யான பழியை கோவலன் மேல் சுமத்தப்பட்டு மேலும் அவன் கொல்லப்பட்டான். பின்னர் இதனை அறிந்த கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்பதனை மன்னனுக்கும், உலகோர்க்கும் உணர்த்த எண்ணி பாண்டிய மன்னன் அவைக்குச் சென்று “வாயிற்கடைமணி நடுங்கா நடுங்க“ என்ற வாசகத்திற்கு இணங்க கண்ணகி மன்னனிடம் “புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி” என்னும் மன்னனும், தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயரை அறிந்து, மேலும் தன் ஒப்பற்ற மகனையே தேர் சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச்சோழனும் வாழ்ந்த, புகார் நகரமே யான் பிறந்த ஊர்  புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் என்பவரின் மகனை மணம்புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னா! ஊழ்வினை பயனால் நின் மதுரை நகரத்துக்கு வந்து, என்னுடைய காற்சிலம்பினை விற்க முயன்று உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி என்று தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்தினால் என்பதனை இன்று பார்த்தோம்.

நன்றி

வினாக்கள்:

1)  பெருவணிகன் மகன் யார்?

2)  ஆடலரசி என்று அழைக்கப்படுபவர் யார்?

3)  கண்ணகியின் கணவன் பெயர்?

4)  புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன் யார்?


10 comments:

  1. Sillapathigaram is one of the great epic.this post is very nice by swaathy

    ReplyDelete
  2. Sillapathigaram epic is very useful to all.

    ReplyDelete
  3. Sillapathigaram epic is very useful to all.

    ReplyDelete
  4. It's very useful and easy to understanding , Thankyou for the notes mam

    ReplyDelete
  5. Eumaxindia - Leading Daily Thanthi Advertising Agencies in Chennai – Publish Classified & Display (Obituary/Remembrance) Ads in Daily Thanthi Newspaper at affordable price

    Daily Thanthi Obituary/Remembrance announcement

    ReplyDelete